Breaking News :

Sunday, April 28
.

சூரியனை ஏன் வணங்க வேண்டும்?


*  காலையில் எழுந்ததும் சூரியனை பார்த்து வழிபடுவது நன்மையளிக்கும். விடியலை வா வா என்று அழைத்து கொண்டு வருபவர் சூரியன். அனைவருக்கும் முதலில் வணக்கம் சொல்லி எழுப்புவதும் சூரியன் தான். நவகிரகங்களில் முதலில் இருப்பவர் சூரியன்.

* இன்னும் பலவிதமாக சூரியனை பற்றி சொல்லலாம். அப்படிப்பட்ட சூரியனை அனைவரும் காலையில் வணங்குவது ஏன்?

*  மனிதர்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள், இறக்க கூடியவர்கள், நோய் நொடியில் விழக்கூடியவர்கள், தவறு செய்யக்கூடியவர்கள், மிகப் பெரிய ஆபத்துகளுக்கு ஆளாகக்கூடியவர்கள்.

* சூரியனால் மனிதனுக்கு பெரும் உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது. சூரியன் ஒரு மகத்தான சக்தி. சந்திரன் இன்னொரு சக்தி. நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாமும் தனித்தனியே சக்தி வாய்ந்தவை. அவை பூமியோடு நெருங்கிய சம்பந்தமுடையவை. நல்லது செய்கின்ற கிரகங்களையும், சூரியனையும், சந்திரனையும் வழிபடுவதில் தவறொன்றுமில்லை.

* சக்தியை அலட்சியம் செய்கிறவர் கடவுளை அலட்சியம் செய்வதுபோல் அர்த்தம். கடவுளின் பேச்சாக, குணமாக, உருவமாக, வடிவமாக சூரிய, சந்திர கிரகங்கள் நம் முன்னே தோன்றி இருக்கின்றன.

* கடவுளை கண்ணால் கண்டறிய முடியாது. பேசிப் புரிந்துகொள்ள முடியாது. அதனால் பார்க்க முடிகிற கடவுளாக நினைத்து சூரியனை வழிபடுகின்றனர்.

* சூரியனை வணங்குவதால் நமது உடலிற்கும், மனதிற்கும் புத்துணர்வு மற்றும் மன அமைதி கிடைக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். காலையில் ஒரு 5 நிமிடம் மன அமைதியுடன் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் சூரியனை பார்த்து தியானம் செய்தால் போதும். அதன் பலனை உணர முடியும்.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.