Breaking News :

Sunday, April 28
.

லட்சுமி தேவியின் அருளை பெற


லட்சுமி தேவியின் அருளை பெற... பெண் குழந்தைகளுக்கு இந்தப் பொருளை தானம் செய்யுங்கள்...!!

லட்சுமி தாயாரை வீட்டிற்குள் அழைத்து நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சத்தை நிலைக்க வைப்பதற்கு நாம் பெரிய அளவில் கஷ்டப்பட வேண்டும். 

வீட்டில் பூஜை  செய்வதற்கு கூட எனக்கு நேரமில்லை... வாரத்தில் 6 நாட்களும் வேலை வேலை... விடுமுறை என்றால் வீட்டு வேலை. இவ்வாறு இருக்க தினமும் விளக்கேற்றி மகாலட்சுமியை எப்படி வீட்டிற்கு வரவழைப்பது என்று கவலைப்பட்டு கொண்டிருந்தால் அந்த கவலையை இப்போதே விட்டுவிடுங்கள்...

எந்த வீட்டில் பெண் குழந்தைகளை போற்றிப் புகழ்ந்து ஆரவாரத்துடன் தலையில் தூக்கிக்கொண்டு வைத்துக் கொண்டாடுகிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் கூப்பிடாமலேயே, வீட்டிற்குள் நுழைந்து விடுவாள். 

பெண் குழந்தைகளுக்கு இந்த பொருளை தானமாகக் கொடுத்தால்... உங்கள் வீட்டில் மகாலட்சுமி நீங்கள் கூப்பிடாமலேயே உள்ளே வருவாள். அது என்ன பொருள்? என்று தானே யோசிக்கிறீர்கள். 

வெள்ளிக்கிழமை ஒரு பெண் குழந்தைக்கு உங்களால் முடிந்த 📿 கண்ணாடி வளையல், 👗 புதிய ஆடை, அழகான வாசனை நிறைந்த பூக்கள் இந்த எல்லாப் பொருட்களையும் வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை நினைத்து தானம் செய்யுங்கள். 

 நீங்கள் வாங்கிக் கொடுத்த கண்ணாடி வளையல் சத்தம் அந்த குழந்தையின் கைகளில் ஒலிக்கும்போது, அந்த குழந்தையுடைய மனது சந்தோஷப்படும்போது, உங்கள் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வந்துவிடுவாள். 

 நீங்கள் வாங்கிக் கொடுத்த புத்தாடையை அந்த குழந்தை போட்டு மனமகிழ்ச்சியை அடையும்போது உங்கள் குடும்பத்திற்கு மகாலட்சுமியின் ஆசீர்வாதம் கிடைத்துவிடும். 

அந்த சிறிய குழந்தையின் தலையில் வாசனை நிறைந்த பூ வை வைத்து அழகு பார்க்கும்போது, உங்களுடைய வீட்டில் மங்களகரமான காரியங்கள் அழகாக நடக்கத் தொடங்கிவிடும். 

 6 மாதத்திற்கு ஒரு முறையோ, வருடத்திற்கு ஒரு முறையோ ஒரு ஏழை குழந்தைக்கு இந்த பொருட்களை வாங்கிக் கொடுத்தாலே போதுமானது. 

 கண்ணாடி வளையல் வாங்குவதற்கு நமக்கு பெரியதாக எந்த செலவும் ஆகப்போவதில்லை. இரண்டிலிருந்து மூன்று டசன் சிறிய குழந்தைகள் அணிவது போல கண்ணாடி வளையலை வாங்கி வைத்துக்கொண்டு, வெள்ளிக்கிழமைதோறும் கோவிலுக்கு சென்று அங்கு வரக்கூடிய சிறிய பெண் குழந்தைகளுக்கு இந்த கண்ணாடி வளையலை தானமாக கொடுத்தால் நன்மை தரும். 

 அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டின் அக்கம்-பக்கத்தில் இருக்கும் ஏழைப் பெண் குழந்தைகளுக்கு இந்த தானத்தை கொடுங்கள். 

 திருமணமாகி குழந்தை பாக்கியம் தள்ளி போகும் தம்பதியர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் சீக்கிரமே குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த சிறிய தானத்தை செய்து, பெரிய அளவிலான பலனை அடையுங்கள்.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.