Breaking News :

Friday, May 17
.

திருச்செந்தூர் முருகன் கோயில் பங்குனி உத்திரம் விழா விவரம்


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் 24-ம் தேதி பங்குனி உத்திரம் விழா – நடைதிறப்பு மற்றும் பூஜை காலங்கள் முழு விவரம்.

 

திருச்செந்துார், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலிலும் உபகோயிலான நாலுமூலைக்கிணறு, அருள்மிகு குன்றுமேலய்யன் சாஸ்தா திருக்கோயிலிலும் 24-03-2024 அன்று பங்குனி உத்திரம் விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. பங்குனி உத்திர திருநாளில் திருச்செந்தூர் திருக்கோயிலில் அருள்மிகு வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

 

மேலும், 24-ம் தேதி இத்திருக்கோயிலின் உபகோயிலான குன்றுமேலய்யன் சாஸ்தா திருக்கோயிலில் சிறப்பு அபிசேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். சேவார்த்திகளுக்கு குடிநீர், மின்வசதி, பந்தல் வசதி அனைத்தும் திருக்கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 24-03-2024 -ல் (ஞாயிறு) பங்குனி உத்திரம் அன்று நடைதிறப்பு மற்றும் பூஜை காலங்கள் விவரம்:

 

அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு, அதிகாலை 3:30 விஸ்வரூபம் தரிசனம், அதிகாலை 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதிகாலை 6:00 மணிக்கு அருள்மிகு வள்ளியம்மன் தவசு மண்டபம் புறப்படுதல்,

 

மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 5 மணிக்கு தபசில் உள்ள வள்ளி அம்பாளை அழைத்து வர சுவாமி புறப்பாடு, அதன் பிறகு அருள்மிகு வள்ளியம்மன் திருக்கல்யாணம் முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு காட்சியருளி தோள்மாலை மாற்றி திருவீதி வலம் வந்து திருக்கோயில் சேர்தல். இராக்கால அபிஷேகம் நடைபெறாது.

 

இரவு 9 மணிக்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு அருள்மிகு வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் என திருக்கோயில் சார்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.