Breaking News :

Tuesday, April 30
.

பிளஸ் 2 தேர்வை நடத்துவது குறித்து அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம்  - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்


தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அனைத்துக்கட்சியினருடன் ஆலோசனை நடத்தவுள்ளார். சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளின் பிரதிநிதிகளுடன்  நாளை (சனிக்கிழமை)  ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்க உள்ளார். மேலும், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எஸ்.எஸ் பாலாஜி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். 


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.