Breaking News :

Saturday, April 27
.

பிரிவுக்கு பின் மீண்டும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா


பிரிவுக்கு பின் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சியான தருணம்….!

பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிகளுக்கு உயிர் உலக் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவரவர் வேலையில் பிசியாக இருந்தாலும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதில் தவறமாட்டார்கள்.

தற்போது விக்னேஷ் சிவன் இளம் ஹீரோ பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்ஐசி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய இடங்களில் நடந்து வருகிறது.

இதற்காக கடந்த 20 நாட்களாக காதல் மனைவி மற்றும் மகன்களை பிரிந்து இருந்த விக்னேஷ் சிவன் தற்போது வீடு திரும்பியுள்ளார். அவரை காண நயன்தாரா குழந்தைகளுடன் வாசலுக்கே வந்து விட்டாராம்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.