Breaking News :

Friday, April 26
.

பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது  தவறு: குஷ்பு கண்டனம்


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்திப்பில் கூறியதாவது:-

விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் ஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை இழிவுபடுத்துவது சரியா? அவர் பேசியது மிகவும் தவறு. 

கட்சி மாறிச்செல்வதை விமர்சிக்கும் தலைவர், பெண்கள் குறித்து இழிவாகப் பேசுவதை கண்டிக்காதது ஏன்?  

பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டதாகச் சொல்லும் திமுக இது தொடர்பாக வாய் திறக்காதது ஏன்? 

திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் பேசியதை திமுக, காங்கிரஸ் கண்டிக்கவில்லை ஏன்? 

பெண்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்தமைக்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும். 

திராவிட கொள்கைகளை அவரவர் வீட்டில் உள்ளவர்களிடமே கொண்டு சேர்க்காதவர்கள் மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பார்கள்? என்றார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.