Breaking News :

Saturday, June 10

ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல் மருந்து தொகுப்பு

தமிழகத்தில் அதுவும் குறிப்பாக, சென்னையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல் மருந்து தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

சென்னையில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ளும் நபர்களுக்கு மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் மருந்து தொகுப்பு இன்று முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து காத்திருப்போருக்கு முடிவுகள் வரும்முன்பே மருந்து தொகுப்பு வழங்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த மருந்து தொகுப்பில் வைட்டமின் சி, ஜிங்க், பாராசிட்டமால் மாத்திரைகள், கபசுர குடிநீர், 3 அடுக்கு முகக்கவசம் போன்றவை வழங்கப்படுகின்றன.

வீடுகளில் தனிமைப்படுத்துதலில் இருப்போரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கும் மருந்து தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.