Breaking News :

Friday, April 26
.

சனி பகவான் யாரை நேசிப்பார், யாரை தண்டிப்பார்!


** நமச்சிவயா எனும் மந்திரத்தை உச்சரிப்பவர்களை சனி பகவான் பாதிப்பதில்லை.
** பாவ வினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடே. இதனை தடையின்றி செய்பவர்களை சனி பகவான் ஒருபோதும் தண்டிப்ப்தில்லை.
** ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி பகவான் நேசிப்பார்.
** சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், மற்றவரை அல்லல்படுத்தி ஆனந்தப் படாதவர்களை பீடிக்கும் காலத்திலும் பாவ மன்னிப்பு அளித்து பாதுகாப்பார் சனிபகவான்.
** சத்தியம் தவறாதவர்கள் மனதில் நித்திய வாசம் செய்வாள் மஹாலக்ஷ்மி. அந்த திருமகள் இருக்கும் இடத்தை திரும்பிக்கூட பார்ப்பதில்லை சனி பகவான். அதாவது சத்தியத்தை தவறாதவரை.
** ஸ்திரவாரம் எனும் சனிக்கிழமை விரதம், சுதர்சன எந்திர வழிபாடு செய்வது சனி பகவானுக்கு பிடிக்கும்.
** நல்லெண்ணம் வைத்து தினம் துதிப்பவரை சனி பகவான் நெருங்குவதே இல்லை.
** வலம்புரி சங்குள்ள இல்லம், சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி பகவான் பாதிப்பை தருவதில்லை.
** ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பகவான் பீடிப்பதில்லை.
** காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் செய்பவர்களை சனி பகவான் கருணையுடன் பார்த்துக்கொள்வார்.
** கருப்பு காராம் பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி விரும்புவார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பு தருவதில்லை.


சனி பகவானுக்கு பிடிக்காதவை:

** விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்களை கண்டால் சனிக்கு மிகவம் பிடிக்குமாம். தன் தீயபார்வையால் திரும்பி பார்ப்பார்.
** பொய், களவு, சூது, வாது செய்பவர்களை ஊக்குவித்து, போகாத ஊருக்கு வழிச் சொல்லி, கடைசியில் தனக்கே உரிய பாணியில் தண்டனைத்தர சனி பகவானுக்கு பிடிக்கும்.
** சுத்தம் இல்லாத இடத்தில் சூன்யம் குடியிருக்குமே தவிர, திருமகள் இருக்க மாட்டாள். ஆனால் சனி பகவான்க்கு அவ்விடங்கள்தான் அதிகம் பிடிக்கும்.
** மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனி பகவான்க்கு பிடிக்கும்.
** மாற்றான் மனையாளை பொண்டாள நினைக்கும் சன்டாளர்களை முதலில் ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப் பார்ப்பதில் சனி பகவானுக்கு நிகர் சனியே.
** அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி பகவான் நீங்காமல் நிரந்தரமாக இருப்பார்.
** தாயிக்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தண்டிப்பார்.
** உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனி பகவானுகு கொள்ளை பிரியம். உடனே பற்றிக் கொள்வார்.
**  ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனி பகவானுக்கு அவர்கள் மீது பாசம் அதிகமாகும். உடனே அவர்களை பீடித்துக் கொள்வார்.
** முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பார்த்தால் சனி பகவான் ரொம்பப் பிடிக்கும்.  
** குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலை சீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனி பகவானுக்கு பிடிக்கும்.
 


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.