சாய்பாபாவின் அற்புதம்!

saibaba-blessings
சாய்பாபாவின் அற்புதம்!

நரசிம்மசுவாமிஜியின் இன்னொரு அற்புத அனுபவம்

நரசிம்மசுவாமிக்கு சாயி பாபாவிடம் இருந்து கிடைத்த ஞானத்தை தவிர இன்னொரு அற்புதமான அனுபவம் ஏற்பட்டது . 
1936 ஆம் ஆண்டு , நவம்பர் இல்லை டிசம்பராக இருக்கும் , உபாசினி மகராஜ் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார் . அதில் சுவாமி ராம் பாபா என்பவரும் வந்தார் . 

அந்த நேரத்தில் மிகவும் மோசமான உடலமைப்புடன் இருந்த ஒரு தொழு நோயாளி அங்கு வந்தார் . பார்க்கவே அருவருப்பும் , நாற்றமும் அடித்துக் கொண்டு இருந்தவனைக் கண்டு வந்திருந்த அனைவரும் முகம் கோணி நின்றனர் .

வந்தவருக்கு உன் கையால் உணவு கொடு என உபாசினி மகராஜ் ராம் பாபாவிடம் கூறினார் . வந்தவரினால் உணவை அருந்த முடியவில்லை . 

திடீரென உபாசினி மகராஜ் வந்தவரினால் உணவு அருந்த முடியவில்லை என்பதினால் அவனுக்கு ஊட்டி விடு என ராம் பாபாவிடம் கூறினார் . 

அதைத் தட்ட முடியாமல் போன சுவாமி ராம் பாபாவும் , கூடுமானவரை அந்த தொழு நோயாளியின் ரத்தம் வழிந்து கொண்டு இருந்த உதடுகளில் தன்னுடைய கைகள் பட்டுவிடாதபடி பார்த்துக் கொண்டு உணவு கொடுத்தார் . அதனால் சற்று உணவு கிழே விழுந்தது .

அதன் பின் அந்த தொழு நோயாளி போய்விட அவர் விட்டுச் சென்ற உணவை அருந்துமாறு உபாசினி மகராஜ் சுவாமி ராம் பாபாவிடம் கூறினார் . அந்த உணவிலோ சிறிது ரத்தமும் சிந்தி இருந்தது . அருவருப்பினால் எத்தனை முயன்றும் அவரால் ஒரு கவளம் கூட சாப்பிட முடியவில்லை .

அதற்குப் பின் உபாசினி மகராஜ் நரசிம்மஸ்வாமியை பார்க்க அவர் முன் வந்து சற்றும் தாமதிக்காமல், அந்த நோயாளி விட்டுச் சென்று இருந்த உணவை அருந்தினார் . கொஞ்சம் கூட முகம் கோணவில்லை.
கூடி இருந்த அனைவருக்கும் உபாசினி மகராஜ் கூறினார் ,' நீங்கள் எவராவது வந்தவரைப் பார்த்தீர்களா ? எத்தனை விரைவாக அவர் திரும்பிச் சென்றார் என ? 

உண்மையிலேயே தொழு நோயாளியாக இருந்திருந்தால் அப்படி சென்று இருக்க முடியுமா ? வந்தவர் வேறு யாரும் அல்ல . அவரேதான் சாயிநாதர் . அவரை நரசிம்மசுவாமியால்தான் அடையாளம் கண்டுகொள்ள முடிந்திருக்கின்றது '

அந்த நிகழ்ச்சியைக் கண்ட நரசிம்மஸ்வாமி , தனக்கு வெளி வேஷத்தைக் கண்டு மயங்கக் கூடாது என்ற உபதேசம் செய்யவே சாயிநாதர் அப்படிப்பட்ட வேஷத்தில் வந்திருக்கின்றார் என்பதை தெரிந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியே நரசிம்மஸ்வாமியின் வாழ்வில் பெரிய பாடத்தைத் தந்து இருந்தது . அவருடைய ஆன்மீக பயணத்தில் சாயிநாதரே வழி நடத்திச் சென்று கொண்டு இருந்தார் .