Breaking News :

Monday, April 29
.

ஆளுநர் அனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்டது என்ன? சபாநாயகர் அப்பாவு வாசித்தார்


நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. தி.மு.க, அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  இந்தக் கூட்டத்தில், ஆளுநர் அனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்டது என்ன? சபாநாயகர் அப்பாவு வாசித்தார். சபை குறிப்பில் ஆளுநர் திருப்பி அனுப்பிய கடிதத்தை பதிவு செய்தார் சபாநாயகர் அப்பாவு.

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல என சபாநாயகர் தெரிவித்தார். காமாலைக்கண்ணுடன் ஏ.கே.ராஜன் அறிக்கை என ஆளுநர் விமர்சனம் என சபாநாயகர்.அவசியத்தை உணர்ந்து சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. மேலும், நீட் விலக்கு கோரும் மசோதாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைக்க உள்ளார்  என மேலும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.