தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்த்தில் இன்று ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ராமானுஜரின் 216 அடி உயர ஐம்பொன் சிலையை இந்திய பிரதமர் மோடி நேற்று திறந்துவைக்கிறார்.
இந்த சமத்துவத்திற்கான சிலை திறப்பு விழாவிற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ள நிலையில் அவர் சார்ந்த அத்தனை நிகழ்ச்சிகளையும் முழுமையாக புறக்கணித்து உள்ளார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.. காய்ச்சல் காரணமாக தான் கலந்து கொள்ள முடியவில்லை என தெலங்கானா முதல்வர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
ராமானுஜர் அவதரித்து 1,000 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில் உள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாக பத்ம பீடத்தின் மீது 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது.
‘சமத்துவ சிலை’ என்றழைக்கப்படும் இந்த சிலை நேற்று (சனிக்கிழமை) திறக்கப்பட்டது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிலையை திறந்துவைத்தார். இதனை முன்னிட்டு ஐதராபாத்தில் இருந்து இந்த ஆசிரமத்திற்கு வரும் அனைத்து தடங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ராமானுஜரின் சிலை இரவில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தன.
ரூ.1,000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆசிரமத்திற்கு தற்போது தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம், கர்நாடகம், கேரளா, மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வேத பண்டிதர்கள் வந்திருந்தனர். இதுதவிர அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும் இங்கு ஏராளமான தொண்டு செய்ய வந்திருந்தனர். பிரதமர் வருகையையொட்டி ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தன.