Breaking News :

Monday, April 29
.

இ- பதிவில் சந்தேகமா?- 1100-ல் தொடர்புக் கொள்ளலாம்!


தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும், மற்ற நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழகம் வருவோருக்கு இ- பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாவட்டங்களுக்கு உள்ளேயும் இ- பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ- பதிவிற்காக https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையதளத்தைப் பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது தமிழக அரசு.


இந்த நிலையில் இ- பதிவு முறை குறித்த சந்தேகங்கள், கேள்விகளுக்கு இலவச எண் 1100- ஐ தொடர்பு கொள்ளலாம். காலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இலவச எண் 1100- ஐ பொதுமக்கள் தொடர்புக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.