Breaking News :

Monday, April 29
.

மனைவியின் அருமை கவிதையில்...


நீரின் அருமை பயிரில் தெரியும்!
நிலத்தின் அருமை விளைச்சலில் தெரியும்!
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
கல்வியின் அருமை பதவியில் தெரியும்!
பணத்தின்*அருமை *வறுமையில் தெரியும்!
தாயின் அருமை அன்பினில் தெரியும்!
தந்தையின் அருமை *அறிவினில்*தெரியும்!
நண்பனின் அருமை *உதவியில்*தெரியும்!
அண்ணனின்*அருமை *அன்பளிப்பில் தெரியும்!
அக்காவின்*அருமை *அரவணைப்பில் தெரியும்!
*தம்பியின்*அருமை *தயவில்*தெரியும்!
*தங்கையின்*அருமை *விருந்தில்*தெரியும்!
மகளின் அருமை மரியாதையில் தெரியும்!
மகனின் அருமை சுமையில் தெரியும்!
ஆனால்
மனைவியின் அருமையோ அனைத்திலுமே தெரியும்!
ஆனால்!... இது...
அவளின் மறைவிற்கு பின்பே பலருக்கும் புரியும்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.