முதலிரவில் என்ன செய்யக் கூடாது?
ஆணோ பெண்ணோ மறக்காமல் இதை படியுங்கள்.
என்னை ஏன் பிடித்துள்ளது?
அப்படி என்ன நான் சிறப்பு?
இது வரை எத்தனை பெண்/ஆண் பார்த்துள்ளீர்கள்?
இதற்கு முன் காதல் அனுபவம் உண்டா?
என்னை விட அந்த ஆண்/பெண் எந்தளவில் உசத்தி?
ஏன் அக்காதல் தோல்வி அடைந்தது?

வெறும் காதல் மட்டும் தானா இல்ல வேறு எதாவது கசமுசா உண்டா?
உங்கள் அம்மா/சகோஸ்களிடம் உங்களுக்கு எந்த அளவு அன்பு/பாசம்?
இனி சம்பளத்தினை என்னிடம் முழுதாகத் தருவீர்களா?
வீட்டு கணக்கு வழக்கை நானே பொறுப்பேற்கவா?
என்னென்னெ கெட்ட பழக்கம் உண்டு?
போர்ன் பாக்குற பழக்கம் உண்டா?
எத்தனை நண்பர்கள் / நண்பிகள்? அவர்கள் வீட்டுக்கு செல்லும் பழக்கம் உண்டா?
இனிமே வீட்டுக்கு நேரத்துக்கு வந்துடுவீங்களா….
வெளிய ரொம்ப நேரம் நண்பர்களுடன் சுத்திகிட்டு இருக்கக்கூடாது… தெரியுமா..?
புகை, குடிப்பழக்கம் உண்டா? எந்தளவுக்கு உண்டு?
நம்மிருவருக்கும் இடையில் இனி ரகசியமே இருக்கக் கூடாது?
மேக்கப்புக்கும், உடைகளுக்கும் நிறைய செலவு செய்வியா…?
அடிக்கடி அம்மா வீட்டுக்கு போவியா?
இன்னும் இப்படி நிறைய இருக்கு… நினைவில் வரும் போது சேர்த்துட்டே இருப்பேன்.
நினைவில் கொள்ளுங்கள்… மறக்காதீர்கள்…
தயவு செய்து இந்த மாதிரியான மேலுள்ள கேள்விகளை மட்டும் முதல் இரவில் கேட்டு விடாதீர்கள்? அப்படி கேட்டு விட்டால், சில சமயம் உங்கள் கணவர்/மனைவிடம் உங்களுக்கு அதுவே கடைசி இரவாகவும் இருந்து விடவும் வாய்ப்புண்டு.
அதாவது, நித்திய கண்டம் ஆனால் பூர்ண ஆயுசு தான்.
உங்கள் மண வாழ்க்கைக்கு.