Breaking News :

Monday, April 29
.

விநாயகரை கனவில் கண்டால் என்ன பலன்?


எத்தனையோ கடவுள்கள் இருந்தாலும் விநாயகப் பெருமானையே முழுமுதற் கடவுள் என வணங்குகிறோம். எந்த தெய்வத்தை வழிபட துவங்குவதாக இருந்தாலும் சரி, எந்த பரிகாரம் செய்வதாக இருந்தாலும் சரி, எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் சரி விநாயகரை வழிபட்டு, அவருக்கு உரிய பூஜைகளை செய்த பிறகு தான் மற்ற தெய்வங்களை வழிபடுவது வழக்கமாக உள்ளது. யானை முகம், ஒற்றை தந்தம், நான்கு திருக்கரங்கள், பானை வயிறு ஆகியவற்றுடன் ஓம்கார வடிவமாக விளங்குபவர் விநாயகர்.

விநாயகரின் உருவ அமைப்பை ஞானம் மற்றும் செல்வ வளத்தின் அடையாளமாக விளங்குவதாகும். இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வாழ்க்கையில் உள்ள தடைகள், கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி, வெற்றிகளை தரக் கூடியவர் என்பதால் பெருபாலானவர்களின் இஷ்ட தெய்வமாக விநாயகர் விளங்குகிறார். கிழமைகளில் புதன் கிழமையும், திதிகளில் சதுர்த்தி திதியும் விநாயகர் வழிபாட்டினை மேற்கொள்ள மிகவும் உகந்தவையாகும். இப்படி பக்தர்களை காக்கும் கடவுளாக விளங்கும் விநாயகர் நம்முடைய கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்? தெய்வங்கள் கனவில் வருவது பற்றி கனவு சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 

விநாயகர் சிலை கனவில் வந்தால் :

 

விநாயகர் சிலை கனவில் வந்தால் :

கனவு சாஸ்திரப்படி, உங்களுடைய கனவில் எந்த தெய்வத்தை கண்டாலும் அது மிகவும் அறிகுறியாகும். உங்களுடைய வாழ்வில் நன்மைகளும், புதிய மாற்றங்களும் நிகழப் போகிறது என்பதையே இது குறிப்பதாகும். அதிலும் விநாயகர் சிலை உங்கள் கனவில் வருவது மிகவும் மங்களகரமான அறிகுறியாகும். நீண்ட நாட்களாக நடக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த விஷயம் ஒன்று நடக்க போவதாக அர்த்தம். ஒரு நல்ல தகவல் உங்களை தேடி வரப் போகிறது என்று அர்த்தம். அதோடு மங்கள காரியம் உங்கள் வீட்டில் நடக்க போகிறது என்பதற்கான அடையாளம் ஆகும்.

 

விநாயகர் குதிரையில் வந்தால் :

 

விநாயகர் குதிரையில் வந்தால் :

விநாயகர் குதிரையில் வருவது போல் கனவு வந்தால் அதுவும் மிக நல்ல அறிகுறியாகும். நீங்கள் விரைவில் மங்கள காரியம் அல்லது புனிதமான விஷயங்களுக்காக பயணம் மேற்கொள்ள போகிறீர்கள் என்பதை உணர்த்தும் கனவாகும். அது மட்டுமல்ல உங்களின் பல ஆசைகள் நிறைவேறப் போகிறது என்று அர்த்தம். அதே சமயம் இது போன்ற ஒரு கனவு வந்ததாக நீங்கள் யாரிடமும் பேசவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ கூடாது. இல்லாவிட்டால் உங்களின் கனவிற்கான பலன் கிடைக்காமல் போகும்.

 

விநாயகர் மூழ்குவதாக கனவு வந்தால் :

 

விநாயகர் மூழ்குவதாக கனவு வந்தால் :

கனவு சாஸ்திரத்தின் படி, விநாயகர் நீரில் மூழ்குவது போல் கனவு கண்டால், உங்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரப் போவதாக அர்த்தம். சில பொருளாதார இழப்புகளையும் நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இது போன்ற சூழ்நிலையில் நீங்கள் விழிப்புணர்வுடன் இருப்பதுடன், இதற்கு பிறகு விநாயகர் வழிபாட்டினை நீங்கள் தொடர்ந்து முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.

 

விநாயகரை வழிபடுவதாக கனவு கண்டால் :

 

விநாயகரை வழிபடுவதாக கனவு கண்டால் :

உங்கள் கனவில், நீங்கள் விநாயகப் பெருமானை வழிபடுவது போல் கனவு கண்டால் அது மிகவும் நல்ல சகுனமாகும். மிக விரைவில் உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறப் போகிறது என்று அர்த்தம். அது மட்டுமல்ல விநாயகரின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது என்றும், அவர்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தையும் விலக்க போகிறார் என்று அர்த்தம்.

 

விநாயகரை அலங்கரிப்பதாக கனவு கண்டால் :

 

விநாயகரை அலங்கரிப்பதாக கனவு கண்டால் :

குங்குமம் போன்ற பளிச்சென்ற மங்கல பொருட்களை கனவில் கண்டால் வெற்றிகரமான மற்றும் செல்வ செழிப்பான எதிர்காலம் அமையப் போகிறது என்று அர்த்தம். அதுவும் விநாகருக்கு மஞ்சள், குங்குமம் வைத்து அலங்கரிப்பது போல் கனவு கண்டால் அது பக்தியின் வெளிப்பாடாகும். விநாயகர் மீது நீங்கள் கொண்டுள்ள பக்தி, அன்பு ஆகியவற்றை குறிப்பதாகும். நல்ல கவனம் செலுத்தி, முயற்சி செய்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று பொருள்.

 

தெரிந்து கொள்ளுங்கள்...

 

               

*ஸ்ரீ விநாயகர் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!*

 

*சௌஜன்யம்..!*

 

*அன்யோன்யம் .. !!* 

 

*ஆத்மார்த்தம்..!*

 

*தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!*

 

*அடியேன்*

*ஆதித்யா*


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.