கந்தசஷ்டி விழா ஏன்?
ஐப்பசி அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி, சஷ்டி வரையிலான 6 நாட் களும் கந்தசஷ்டி விழா அல்லது கந்தசஷ்டி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழிப ட்டால் வேண்டியது கிடைக்கும். முருகப் பெருமான், சூரபத்மனுடன் போரிட்டு, வதம் செய்த 6 நாட்களை தான் நாம் கந்த சஷ்டி விழாவாக கொண்டாடுவதாக சொல்கிறோம்.
ஆனால் சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம் மற்றும் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழி பட்டால் வேண்டியது கிடைக்கும். முக்கியமாக குழந்தை பாக்கியம் வேண்டி முருகனை நினைத்து விரதம் இருந்தால் அந்த கந்தனே குழந்தையாக பிறப்பான் என்பது நம்பிக்கை.