திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்கத்தேர் உலா இன்று முதல் ரத்து...!

thiruchendur-subramania-swamy-gold-car-festival
Thiruchendur Subramania Swamy gold car festival

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோயிலில் தங்கத்தேர் உலா இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் திடீரென ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.