பரிகாரம் பலிக்குமா? பலிக்காதா?

parikaram-palikkuma
பரிகாரம் பலிக்குமா? பலிக்காதா?

ஜாதகத்தில் தோஷங்கள் ஏதேனும் இருந்தால், அந்த தோஷம் நீங்குவதற்காக பலரும் ஜோதிடரை வைத்து பரிகாரம் செய்வார்கள். அவ்வாறு தோஷங்கள் நீங்குவதற்காக பரிகாரங்கள் செய்து கொண்டிருக்கும்போது தோன்றும் சகுனங்களை வைத்து, செய்யும் பரிகாரம் உங்களுக்குப் பலன் தருமா? தராதா? என்பதை சுலபமாக அறிந்து கொள்ள முடியும்.

பரிகாரம் செய்துகொண்டிருக்கும் சமயத்தில் ஏதாவது சகுனங்கள் தோன்றுகிறதா என்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். சகுனங்கள் பார்த்து கூறப்படும் பரிகாரங்கள் நிச்சயமாகப் பலன் தரும். எனவே, பரிகாரம் சம்பந்தமான சகுனங்களை இந்தப் பதிவில் காண்போம்.

பரிகாரங்களைச் செய்யும்போது கோயில் மணியோ அல்லது பூஜை மணியோ ஒலிப்பதைக் கேட்க நேர்ந்தால் உங்கள் பரிகாரம் நிச்சயம் பலன் தரும்.

அதுபோன்ற சமயம்தில் யாராவது கோயில் பிரசாதம் கொண்டு வந்து உங்களுக்குக் கொடுத்தால் நீங்கள் செய்யும் பரிகாரம் நிச்சயம் பலன் தரும்.

மந்திர ஒலி அல்லது பக்திப் பாடல்களைக் கேட்க நேர்ந்தால் உங்கள் பரிகாரங்கள் நிச்சயம் பலன் தரும்.
பரிகாரம் செய்யும்போது கோயில் அர்ச்சகர் அங்கே வரக்கண்டால் நீங்கள் செய்யும் பரிகாரம் நிச்சயம் பலன் தரும்.

அதேபோல், பரிகாரம் செய்கையில் யாராவது ஒருவர் குளித்துவிட்டு வருவதைக் கண்டால் பரிகாரம் நிச்சயம் பலன் தரும்.

பரிகாரம் செய்யும்போது எந்த தெய்வத்தின் படம் அல்லது உருவம் உங்கள் கண்ணில் படுகிறதோ அந்த தெய்வத்தை வணங்கி வர, பரிகாரம் நிச்சயம் பலன் தரும்.

யாராவது ஒருவர் ஒரு கோயிலைப் பற்றியோ, ஒரு தெய்வத்தைப் பற்றியோ பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டாலோ, ஒரு தெய்வத்தின் பெயரை உச்சரிப்பதைக் கேட்டாலோ, அந்தக் கோயில் அல்லது அந்த தெய்வத்தை நீங்கள் வழிபட பரிகாரம் பலன் தரும்.