செய்முறை:
இடது கை பெருவிரலை படத்தில் காட்டியுள்ளபடி வலது கை விரல்களால் மூடிக்கொள்ளவும். இடது கையின் மற்றவிரல்கள் வலது கை விரல்களின் பின்பகுதியில் சாய்த்து வைத்துக்கொள்ளவும். வலது கை பெருவிரல் நுனியால் இடது கை நடு விரல் நுனியை தொட்டுக்கொள்ளவும், மற்ற இடது கை விரல்கள் நடுவிரலை சார்ந்து இருக்கவேண்டும். இந்த முத்திரை சங்கு வடிவம் போல் இருக்கும். இதனால் இதை சங்கு முத்திரை என அழைக்கப்படுகிறது.
இந்த முத்திரை பயிற்சியால் நமது சுவாச மண்டலம் அதிக சக்தி பெறுகிறது. இந்த முத்திரை பயிற்சியின் போது கண்களை மூடிக்கொண்டு அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு "ஓம்" மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தால் இந்த முத்திரையினால் ஏற்படும் நல்ல பலன் முழுவதும் நன்றாக கிடைக்கும்.
இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம். சில நிமிடங்கள் செய்தாலே இது நல்ல பலன் கொடுக்கும்.
சங்கு முத்திரையினால் ஏற்படும் நல்ல பயன்கள் :
1. தைராய்டு நோய் குணமடைகிறது.
திக்கிப் பேசுவது குணமடைகிறது.
2. குரல் வளம் நன்றாகி பேச்சு நன்றாக வருகிறது.
3. நமது தொப்புளுக்கு கீழே உள்ள 72000 நரம்புகளை சக்தியுடன் இயங்கவைக்கிறது.
4. நல்ல பசி கொடுக்கிறது.
5. ஜீரண சக்தி அதிகமாகிறது.
6. உடலில் உள்ள எரிச்சல் நீங்குகிறது.
7. காய்ச்சல் குணமடைகிறது.
8. அலர்ஜி மற்றும் தோல் நோய் குணமடைகிறது.
9. தசை வலுவடைகிறது.
10.தொண்டையில் ஏற்படும் நோய்கள் குணமடைகிறது.
11. மன அமைதி கிடைக்கிறது.
12.மன ஒருமைப்பாடும் ஞாபகசக்தியும் அதிகரிக்கிறது.
தியானத்தின்போது இந்த முத்திரை பயிற்சி அதிக பலன் கொடுக்கும்.