தேவையானவை:
கருப்பு கொண்டைக்கடலை - 150 gram
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் - 5 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - கால் ஸ்பூன்
புதினா - ஒரு கைப்பிடி
செய்முறை:
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து உப்பு போட்டு நான்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும்.
பச்சை வாசனை போனவுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள், சீரகத்தூள் சிறிது உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து தக்காளியை நன்கு மசிய வேக விடவும்.
தக்காளி நன்கு மசிந்து கிரேவி பதம் வந்தவுடன் வேகவைத்த கடலை அந்த தண்ணீரோடு சேர்த்து ஊற்றவும்.
பின்பு அரைத்த தேங்காய் விழுது தேவையான அளவுக்கு உப்பு அதனுடன் கரம் மசாலா தூள் , மிளகுத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு கடாயை மூடி அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
கிரேவி கெட்டியாகி எண்ணெய் மேலே வந்தவுடன் மல்லித்தழை தூவி இறக்கினால் மிகவும் சுவையான கொண்டைக்கடலை கறி குழம்பு ரெடி.
இந்த குழம்பு சப்பாத்தி, இடியாப்பம் ,ஆப்பம் தேங்காய் பால் சாதம் ,தாளித்த சாதம் அனைத்துக்கும் சூப்பராக இருக்கும் .