ஆண்களுக்கு இணையாய எல்லாவற்றிலும் போட்டிபோடும் பெண்கள் இதையும் விட்டுவைக்கவில்லை.
சுய இன்பம் (பாலியல் இன்பநிலை அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதற்காக தானாகவே பிறப்புறுப்புகளைத் தூண்டுதல்) என்பது மனிதர்களின் அடிப்படையான ஒரு பாலியல் சார்ந்த செய்கையாகக் கருதப்படுகிறது.
வயது வந்த பருவத்தில் பெண்கள் பொதுவாக, தங்கள் கிளிட்டோரிஸ் அல்லது அருகில் உள்ள பகுதிகளைத் தேய்ப்பதன் மூலம் சுய இன்பம் அடைகிறார்கள். இளம்பருவத்தில் பெரும்பாலும் காணப்படுகிற ஒரு பாலியல் ரீதியான இரண்டாவது செயல்பாடாக உள்ளது.
பெண்கள் அவ்வப்போது சுய இன்பம் செய்கிறார்கள். பாலியல் ஆரோக்கியம் மற்றும் நடத்தை குறித்த தேசிய கருத்துக்கணிப்பின்படி (நேஷனல் சர்வே ஆஃப் செக்ஷுவல் ஹெல்த் அன்ட் பிஹேவியர் (NSSHB)), 14 முதல் 17 வயதுடைய இளம் பருவத்தினரில், 48% பெண்களும் 73% ஆண்களும் சுய இன்பம் செய்துள்ளனர்.
பெண்களின் சுய இன்ப முறை? (How do women masturbate?)
பெண்கள் சுய இன்பம் செய்வதற்கு பல வகையான முறைகளைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் #கைகைளைக் கொண்டு #பெண்_குறியைச் சுற்றிலும் உள்ள மேட்டுப் பகுதிகளிலும் கிளிட்டோரிஸ் பகுதியிலும் முன்னோக்கியும் பின்னோக்கியும் தேய்த்தல், வட்ட வடிவத்தில் தேய்த்தல் அல்லது மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் தேய்த்தல் மூலம் சுய இன்பம் செய்கிறார்கள். சிலர் கிளிட்டோரிஸ் பகுதியில் தலையணை அல்லது மெத்தை போன்ற பொருள்கள் அழுத்தும்படி செய்வதன் மூலம் செய்கின்றனர். சில பெண்கள் இரண்டு தொடைகளையும் இறுக்கமாக ஒன்றின் மீது ஒன்றை அழுத்துவதன் மூலம், இடுப்பின் அடிப்பகுதித் தசைகள் இறுக்கமடையும்படி செய்வதன் மூலம் சுய இன்பம் செய்கிறார்கள். சிலர் பெண்ணுறுப்பிற்குள் விரல்கள் அல்லது பாலியல் சாதனங்களை (செக்ஸ் டாய்ஸ்) நுழைத்து தசைகளைத் தூண்டி சுய இன்பம் செய்கிறார்கள்.
சுய இன்பத்தால் ஏற்படும் விளைவுகள் :
குற்ற உணர்ச்சி, பயம், #மனக்கலக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதுண்டு. ஆனால் இவை இயல்பானவை அல்ல. “சுய இன்பம் என்பது தவறு” அல்லது “உடல் நலத்திற்குக் கேடானது” என்பது போன்ற எண்ணங்களாலேயே இது போன்ற உணர்வுகள் உருவாகின்றன.
மதங்களும் பண்பாடுகளும் சுய இன்பம் என்பதைக் கண்டிப்பதுடன் அதனை ஒரு பாவமாக அல்லது குரூரமான செயலாகச் சித்தரித்துள்ளன. இதே போன்ற எண்ணங்கள் பெற்றோர் மனதிலும் பெரியவர்கள் மனதிலும் பதிந்து, குழந்தைகள் வளரும்போது, சுய இன்பம் பற்றி ஒருவர் குற்ற உணர்ச்சி அடைகிறார். சிறு வயதிலேயே இன்பத்தைக் கண்டுவிட்டால் #படிப்பில் கவனக்குறைவு ஏற்படும். அதிகமான காம வெறி ஏற்படலாம் இதனால் #தவறான உறவுகளில் சிக்கிக்கொள்ள வாய்ப்புண்டு.பாலியல் #நோய்கள் வரலாம் .
சுய இன்பத்தின் போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கிளிட்டோரிஸ் அல்லது பெண்ணுறுப்புப் பகுதிகளை கடுமையாகத் தேய்க்கவோ அடிக்கவோ கூடாது. அப்படிச் செய்வதால் ஏதேனும் தீங்கு ஏற்படலாம். லேசாகத் தேய்ப்பதால் அல்லது தூண்டுவதால் இப்பகுதிகளில் காயம் ஏதும் ஏற்படாது.
விரல்கள் அல்லது ஏதேனும் பொருள்களை பிறப்புறுப்பில் நுழைக்கும்போது, #நோய்த்தொற்று எதுவும் வராமல் தடுக்க, தகுந்த சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். தீங்கு விளைவிக்கும் கிருமிகள் எதுவும் வராமல் தடுப்பதற்கு, கைகளையும் பாலியல் சாதனங்களையும் (செக்ஸ் டாய்ஸ்) சோப்பைப் பயன்படுத்தி வெந்நீரில் கழுவுவது முக்கியம்.
தூண்டுதலை ஏற்படுத்தவோ அல்லது பிறப்புறுப்பில் செருகவோ கூரான அல்லது குத்தக்கூடிய பொருள் எதனையும் ஒருபோதும் நுழைக்கக்கூடாது. அப்படிச் செய்வதால் காயம் ஏற்படலாம். கழன்று விழக்கூடிய சிறு பகுதிகளைக் கொண்ட பொருள் எதனையும் பயன்படுத்த வேண்டாம், அவை கழன்று விழுந்து #பிறப்புறுப்பில் சிக்கிக்கொள்ளலாம். பிறப்புறுப்பில் காய்கள் கனிகள் எதனையும் செருக வேண்டாம், இவற்றால் நோய்த்தொற்று (இன்ஃபெக்ஷன்) ஏற்படலாம் அல்லது அவை உள்ளேயே உடைந்து சிக்கிக்கொள்ளலாம்.அளவில் பெரிய பொருட்களை உள்நுழைப்பதால் பெண்ணுறுப்பு வழி பெரிதாகலாம் #திருமணத்திற்கு பிறகு உடலுறவில் கணவனுக்கு இன்பத்தைக் கொடுக்க முடியாது. சுய இன்பத்திற்கு பயன்படுத்தும் விரலில் நகங்கள் இருப்பின் அது பெண்ணுறுப்பை காயப்படுத்தக்கூடும்.அது பக்கவிளைவை ஏற்ப்படுத்தும்.