Breaking News :

Sunday, May 19
.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பால் குடிக்கலாமா?


தாய்மார்கள் காரமான உணவுகள் எடுத்துகொண்டால் குழந்தைக்கு வயிற்று பாதிப்பை உண்டு செய்யும், குழந்தைக்கு வாயு அல்லது வயிற்றுப்போக்கு உண்டாவது தொடர்ந்தால் தாய் தங்கள் உணவில் உள்ள வெப்பத்தை குறைத்து பயன்படுத்த வேண்டும். குழந்தைக்கு காரமான உணவு தான் இந்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது என்று அறிந்தால் இதை தவிர்ப்பதே நல்லது.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க போதுமான அளவு சத்து தேவை என்று அதிக பால் எடுக்கும் பழக்கம் தாய்மார்களுக்கு உண்டு. பால் குடிக்கும் தாய்மார்கள் தாய்ப்பாலூட்டிய பிறகு குழந்தைக்கு தோல் பிரச்சனைகள் ஏற்பட்டால், தாய்ப்பால் கொடுத்த பிறகு குழந்தைக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து அதன் படி பால் குடிக்கலாம்.

காஃபி போன்றே டீயிலும் காஃபைன் உள்ளது. இது தூக்கத்தை பாதிக்க கூடியது. தாய் சேய் இருவருக்கும் தூக்கம் பாதிக்கும். உடல் இரும்பை உறிஞ்சுவதை கடினமாக்கும். தற்காலிக ஆற்றல் அளித்தாலும் சூடான அல்லது குளிர்ந்த தேநீர் குடித்தால் மெலிந்த இறைச்சி போன்ற இரும்புச்சத்து உணவுகளை எடுக்கும் போது குடிக்க வேண்டாம்.

காஃபியும் ஆற்றல் பானம் என்றாலும் நாள் ஒன்றுக்கு 2 கப் மேல் எடுக்க வேண்டாம்.

பீன்ஸ், ப்ரக்கோலி, முட்டைக்கோஸ்,பிரஸ்ஸல்ஸ் பொதுவாக வாயு உணவுகள் இது வீக்கம், துர்நாற்றம், வாயு வெளியேறுதல் உண்டு செய்யும். இது இயல்பானவை என்றாலும் தாய் சாப்பிட்ட பிறகு தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு இது சில வாரங்கள் இருந்தால் இந்த வகை உணவுகளை தடுக்கவும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இயல்பாகவே தாகம் உண்டாக கூடும். ஆனால் தாகம் ஏற்படும் ஒவ்வொரு முறையும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது. எவ்வளவு வறட்சி இருந்தாலும் ஊட்டச்சத்து இல்லாத வெற்று கலோரியான சோடாக்கள் தவிர்ப்பது பாதுகாப்பானது.

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் சேர்க்கப்பட்ட சர்க்கரைகள், நார்ச்சத்து, வைட்டமின்கள்  தாதுக்கள் குறைவாக இருப்பதால் அதை தவிர்ப்பதோ அல்லது குறைப்பதோ நல்லது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உணவு முறை குறித்து மருத்துவரிடம் ஆலோசிப்பது பாதுகாப்பானது.   

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.