தலைமுடி கொட்டாமல் இருக்க சில குறிப்புகள்!

hair-fall-problem-health-tips
தலைமுடி கொட்டாமல் இருக்க சில குறிப்புகள்!

சோற்றுக் கற்றாழையின் உட்பகுதியில் இருக்கும் வழவழப்பான விழுதுடன் 1 குவளை (Cup) மருதாணி இலையைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். இதோடு 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்து அலசுங்கள்.

நான்கு நாட்களுக்கு ஒரு முறை இது போல் குளித்து வந்தால், கருப்பு, சிவப்பு, பழுப்பு என மூவண்ணங்களில் கூந்தல் மின்னும்.

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து, ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரைக் கொண்டு தலைமுடியைக் கழுவி வந்தால் முடி கொட்டுதல் நிற்கும்.

தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் இவற்றின் பொடிகளை ஒன்றாய்க் கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்துவிட்டு, காலையில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடிகொட்டுதல் குறையும்.

நெல்லிக்காயை நன்கு சூரிய ஒளியில் உளர்த்தி, நன்கு அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து எடுத்துக்கொண்டு, எண்ணெய்யை கொதிக்க வைக்கவும். பின்னர் எண்ணெய் ஆறியதும் வடிகட்டி எடுத்துக்கொண்டு தலையில் தேய்த்துவந்தால் முடி கருமையாகும்!

கறிவேப்பிலையை பச்சையாக அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி அதன் பின் தலையில் தேய்த்துவர தலைமுடி நன்கு வளரும்; கருமையாகவும் இருக்கும்.

கேரட், எலுமிச்சை சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி எடுத்துக்கொண்டு தலையில் தேய்த்துவர தலைமுடி நன்கு வளரும்