பலாக்கொட்டை சொதி குழம்பு செய்வது எப்படி?

palakottai-kulambu-recipe
பலாக்கொட்டை சொதி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

15 பலாக்கொட்டை
1 தேங்காய்
10 பச்சை மிளகாய்
2 பெரிய 1 தக்காளி
1 டீஸ்பூன் கசகசா
1 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் நெய்
3 டீஸ்பூன் எண்ணெய்
1 துண்டு பட்டை
கல்பாசி சிறிதளவு
3 டீஸ்பூன் அண்ணாச்சி பூ    
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையானஅளவு
தண்ணீர் தேவையானஅளவு
1 பிரியாணி

செய்முறை

முதலில் தேங்காயை துருவி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஒரு ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு வெங்காயம் நறுக்கியது சேர்த்து வதக்கவும்.

பின்பு தேங்காய் துருவலை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து பச்சை மிளகாய், கசகசாவை போட்டு வாசம் வரும் வரை வதக்கி இறக்கவும்.
 
வதங்கிய பொருட்களை ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.

பலாக்கொட்டையை வெறும் வாணலியில் லேசாக வாடினால் மேலே உள்ள தோல் உரித்து வரும் மேலே உள்ள வெள்ளை தோலை உரித்து எடுத்து குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.

விசில் அடங்கியதும் வேக வைத்த பலாக் கொட்டைகள் எடுத்து மேலே உள்ள சிகப்பு தோலை உரித்து எடுக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து சமையல் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை, சோம்பு, கருவேப்பிலை தாளித்து ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மசித்து வதக்கவும்.

அவை வதங்கியதும் அரைத்த தேங்காய் மசாலாவை ஊற்றவும்.

தேவையான உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து தோல் உரித்த பலாக்கொட்டையினை சேர்த்து கொதிக்கவிடவும்.

கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். பலாகொட்டை சொதி குழம்பு ரெடி.....