Breaking News :

Friday, March 31

10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணையை நேற்று வெளியிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்புக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டு மே மாதம் 2-ந் தேதி வரை நடைபெறும்.

பிளஸ்-1-க்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டு மே மாதம் 2-ந் தேதி முடிவடையும். 10-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை நடைபெறும். 10, 11, 12 ஆகிய வகுப்புக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25-ந் தேதி முதல் மே 2 -ந்தேதி வரை நடைபெறும்.

பிளஸ்-2 செய்முறை தேர்வு முடிவுகள் ஜூன் 23-ந் தேதி வெளியிடப்படும். பிளஸ்-1-க்கு ஜூலை 7-ந்தேதி முடிவுகள் வெளியாகும். 10-ம் வகுப்புக்கு ஜூன் 17-ந் தேதி அறிவிக்கப்படும்.

பிளஸ்-2 தேர்வு மே 5-ந் தேதி தொடங்கி, மே 28-ந் தேதி வரை நடைபெறும். பிளஸ்-1 தேர்வு மே 9-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டு மே 31 வரை நடைபெறும். 10-ம் வகுப்புக்கான தேர்வு மே 6-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டு மே 30 வரை நடைபெறும்.

எந்தெந்த தேதியில் என்னென்ன பரீட்சை என்பதை tnschools.gov.in என்ற இணைய தளத்தில் மாணவர்களுடைய பார்வைக்கு வெளியிடப்படும். அது மட்டுமின்றி tge.tn.gov.in என்ற இணைய தளத்திலும் வெளியிடப்படும் என்றார்.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.