சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?

By News Room

தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல் வைக்க உபயோகிக்கிறோமே ) ஒருகைப் பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.

உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தா லும் , அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.

இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி வன்னி மர விநாயகருக்கு பச்சரிசிமாவு படைத்தாலும்,

சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம் படைத்தாலும், ஒரு மிகப் பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.

காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக் கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா, தெரியவில்லை!. ஆனால், உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..

செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப் பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கி யமான பலன்களையும், உங்கள் நியாயமான
அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்ப து , உங்கள் முன்னோர் வழிபாடுதான்.

உங்கள் முன்னோர்களுக்கே, நீங்கள்  உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தி யை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான
ஜீவ ராசி  காக்கை இனம்.

குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிபெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.

தன்உடன்பிறந்தவர்கள்ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத்திகழ இந்த காணுப் பிடி பூஜையைச் செய்கிறார்கள்.

திறந்தவெளியில்தரையைத்தூய்மையாகமெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து,
காக்கைகளை “கா.. கா' என்று குரல் கொடுத்து அழைப்பார்கள்.

அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைக ளும் பறந்துவரும். அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும். வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும்.

அப்படிச்சுவைக்கும்போது அந்தக் காக்கைகள் “கா… கா…’' என்று கூவி தன்கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும்.

அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும், அந்தவாழை இலையில் பொரி,
பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள், வெற்றி லைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.

இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்க ள் (பித்ருக்கள்) காக்கை வடிவில் வந்து வழி பாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.

இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனி பகவானைத் திருப்திப் படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.

காக்கை சனிபகவான் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சிதருமாம்.
காக்கைகளில் நூபூரம் பரிமளம், மணிகாக்கை அண்டங்காக்கை என சிலவகைகள் உண்டு.

காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காணமுடியாது. எமதர்மரா ஜன் காக்கை வடிவம் ஏடுத்து மனிதர்கள் வாழுமிடம்சென்றுஅவர்களின்நிலையைஅறிவாராம்.

அதனால் காக்கைக்கு உணவு அளித்தால்
எமன் மகிழ்வாராம். எமனும் சனியும் சகோதர ர்கள் ஆவர். அதனால், காக்கைக்கு உணவிடு வதால் ஓரே சமயத்தில் எமனும் சனியும்
திருப்தி யடைவதாகக் கருதப்படுகிறது.

காலையில் நாம் எழுவதற்கு முன், காக்கையி ன் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்ல பலன் உண்டு. வீடு தேடி காகங்கள்.வந்து கரைந்தால அதற்கு உடனே உணவிடவேண்டும்.

எனவே, காக்கை வழிபாடு செய்வதால் சனி பகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்.

.
மேலும்