ஸ்ரீ ராமஜெயம் முதலில் எழுதியது யார்?

By Tejas

போரில் ராவணனை வீழ்த்திய ராமர்...இந்த நல்ல செய்தியை யார் சீதையிடம் சென்றுக் கூறுவது என்று யோசிக்கும்பொழுது  நான் நீ என்று பலர் முன்வந்தார்கள். ஆனால் ராமரோ ஆஞ்சநேயர் தான் இதற்குச் சரியான ஆள் என்று அனுமனிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார்.

ராமரின் ஆணையை சிரமேற்கொண்டு சீதையின் இருப்பிடத்திற்கு வந்த ஆஞ்சநேய ருக்கு  சந்தோஷ மிகுதியால்  பேச முடியவி ல்லை. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெரு கியது. இதைக் கண்ட சீதைக்கோ ஏன் அனும னின் கண்களில் கண்ணீர் என்ற கவலை.

இதை சட்டென்று புரிந்துகொண்ட அனுமன்... சந்தோஷத்தில் வாய் பேச முடியவில்லை என்றால் என்ன, ராமர் வெற்றி பெற்ற நற்செ ய்தியை எழுதி காண்பிக்கலாமே என்று "ஸ்ரீ ராமஜெயம்" என்று மண்ணில் எழுத, அதைப் படித்த சீதாப்பிராட்டியாரும் செய்தியறிந்து சந்தோஷமடைந்தார்..

 

அதுவே "ஸ்ரீராமஜெயம்" அனைவரும் எழுத காரணமாயிற்று.

.
மேலும்