பிரதோஷ நிகழ்வை பார்த்தால் என்னென்ன பலன்கள்?

By News Room

பிரதோஷ நிகழ்வை பார்த்தால் நாம் செய்த பல பாவங்கள் நீங்கி பல்வேறு பலன்களை பெறலாம்.
 
பெளர்ணமி மற்றும் அமாவாசைக்கு இரு தினங்களுக்கு முன் வரும் முக்கிய நிகழ்வு பிரதோஷம். இந்த பிரதோஷ நிகழ்வை எத்தனை முறை பார்த்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்போம்.

பிரதோஷ பலன்

3 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் பிரம்மா. விஷ்ணு, சிவன் முதல் மூன்று தெய்வங்களும் பார்ப்பதற்கு சமம்.
5 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் நீங்கும்.
7 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.
11 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் உடலும், மனமும் வலிமை பெற்று புது தெம்பு கூடும்.
13 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் நினைத்த காரியம் தங்கு தடையின்றி நடைபெறும்.
21 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
33 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் சிவன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
77 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு ருத்ர யாகம் செய்த பலன் கிடைக்கும்.
108 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு தேவேந்திர பூஜை நடத்தியதற்கு சமம்.
121 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் அடுத்த ஜென்மம் கிடையாது.

1008 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு அஷ்வமேதயாகம் நடத்தியதற்கு சமம்.

.
மேலும்