சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

By Senthil

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நாளை காலை, 6.45 மணி முதல், 7.25 மணிக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி யாகசாலை பூஜைகள் கோலாகலமாக தொடங்கியுள்ளன.

திருச்சி அருகேயுள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் புகழ்பெற்ற சக்தி ஆலயங்களில் ஒன்றாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வேப்பிலை ஆடை தரிப்பது, தீச்சட்டி ஏந்தி அம்பாளை வழிபடுவது, கண்மலர் வாங்கி காணிக்கை செலுத்துவது போன்றவை, இங்கு முக்கியமான நேர்த்திக்கடன்களாக இருக்கின்றன. மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் பூச்சொரிதல் விழாவும் அதே போல் சித்திரை மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவும் மிகவும் பிரபலம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலுக்கு, கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. புதிதாக கிழக்கு ராஜகோபுரம், ஏழுநிலைகள் கொண்டு கட்டப்பட்டு, எழிலுடன் பஞ்ச வர்ணம் தீட்டப்பட்டுள்ளன. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நிலையிலும் மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

அந்த சிற்பங்களுக்கு பல மாதங்களாக வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வந்தது. இப்பணி சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கிழக்கு ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் நாளை காலை புதன்கிழமை காலை 6.45 முதல் 7.25 மணிக்குள் கடக லக்னத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி, கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

.
மேலும்