புரட்டாசி மாத சனி : பெருமாளுக்கு 108 போற்றி 3 முறை சொல்ல வேண்டும்

By saravanan

ஓம் அன்பின் சுடரே போற்றி
ஓம் அளவிலா அறமே போற்றி
ஓம் அருட்கடலே போற்றி
ஓம் அரவ சயனா போற்றி
ஓம் அக்காரக்கனியே போற்றி
ஓம் அரவிந்தலோசனா போற்றி
ஓம் அச்சத மூர்த்தி போற்றி
ஓம் அற்புத லீலா போற்றி
ஓம் அநாதரட்சகா போற்றி
ஓம் அலர்மேல் மார்பா போற்றி
ஓம் அலங்கார பிரியனே போற்றி
ஓம் ஆதிநாராயணா போற்றி
ஓம் ஆயர் கொழுந்தே போற்றி
ஓம் ஆழ்வார் உயிரே போற்றி
ஓம் ஆதிமூலமே போற்றி
ஓம் ஆபத்து சகாயா போற்றி
ஓம் ஆலிலை பாலகா போற்றி
ஓம் ஆனையை காத்தாய் போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் இன்னல் தீர்ப்பாய் போற்றி
ஓம் இமையவர் தலைவா போற்றி
ஓம் ஈகை நெஞ்சினாய் போற்றி
ஓம் உலகமுண்ட வாயா போற்றி
ஓம் உம்பர் கோமானே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
ஓம் எட்டெழுத்தானே போற்றி
ஓம் எழில்மிகு தேவா போற்றி
ஓம் ஏழுமலையானே போற்றி
ஓம் ஏழைப் பங்காளா போற்றி
ஓம் ஒளிமணி வண்ணா போற்றி
ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
ஓம் கலியுக வரதனே போற்றி
ஓம் கண் கண்ட தேவா போற்றி
ஒம் கருட வாகனனே போற்றி
ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
ஓம் கருட கொடியானே போற்றி
ஓம் கமலக் கண்ணனே போற்றி
ஒம் கஸ்துõரி திலகனே போற்றி
ஓம் கலியுக தெய்வமே போற்றி
ஓம் கார்முகில் வண்ணா போற்றி
ஓம் குன்றம் தாங்கினாய் போற்றி
ஓம் கோவிந்த மூர்த்தி போற்றி
ஓம் கோபியர் லோலா போற்றி
ஓம் கோகுல பாலா போற்றி
ஓம் கோதண்டபாணி போற்றி
ஓம் சர்வலோக சரண்யா போற்றி
ஓம் சபரிக்கு அருளினாய் போற்றி
ஓம் சகஸ்ரநாம பிரியனே போற்றி
ஓம் சாந்த சொரூபியே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பாய் போற்றி
ஓம் சங்கரப்பிரியனே போற்றி
ஓம் சங்கு சக்கர தாரியே போற்றி
ஓம் சப்தகிரி வாசனே போற்றி
ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
ஓம் சீனிவாச பெருமாளே போற்றி
ஓம் சீதேவி நாயகனே போற்றி
ஓம் சுயம்பிரகாசா போற்றி
ஓம் சுந்தர தோளினாய் போற்றி
ஓம் சுந்தரராஜமூர்த்தி போற்றி
ஓம் செல்வ நாராயணனே போற்றி
ஓம் தசரதன் வாழ்வே போற்றி
ஓம் தசாவதாரம் எடுத்தாய் போற்றி
ஓம் திருமகள் கேள்வா போற்றி
ஓம் திருவேங்கடவனே போற்றி
ஓம் திருமலை உறைவாய் போற்றி
ஓம் திருத்துழாய் பிரியனே போற்றி
ஓம் துருவனைக் காத்தாய் போற்றி
ஓம் துன்பம் தீர்ப்பவனே போற்றி
ஓம் தேவகி பாலகனே போற்றி
ஓம் தோள்மாலை சூடினாய் போற்றி
ஓம் நந்தகோபாலனே போற்றி
ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி
ஓம் நான்முகன் பிதாவே போற்றி
ஓம் பக்தவத்சலனே போற்றி
ஓம் பக்தர் சகாயனே போற்றி
ஓம் பரந்தாமனே போற்றி
ஓம் பத்மநாபனே போற்றி
ஓம் பரம தயாளனே போற்றி
ஓம் பத்மாவதி துணைவா போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பாற்கடல் உறைவாய் போற்றி
ஓம் பார்த்தசாரதியே போற்றி
ஓம் பார் புகழ் தேவா போற்றி
ஓம் பாஞ்சஜன்யம் ஏந்தினாய் போற்றி
ஓம் பாண்டவர் துõதா போற்றி
ஓம் பாஞ்சாலியை காத்தாய் போற்றி
ஓம் பாலாஜி வெங்கடேசா போற்றி
ஓம் பிரகலாதப் பிரியனே போற்றி
ஓம் புருஷோத்தமனே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
ஓம் புரட்டாசி நாயகா போற்றி
ஓம் மகாவிஷ்ணுவே போற்றி
ஓம் மண்மலர் ஏற்றாய் போற்றி
ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
ஓம் மலையப்ப சுவாமி போற்றி
ஓம் மாயக் கண்ணனே போற்றி
ஓம் யசோதை கண்மணியே போற்றி
ஓம் ராமானுஜர் வாழ்வே போற்றி
ஓம் வகுளமாலிகா செல்வனே போற்றி
ஓம் விஜய ராகவனே போற்றி
ஓம் வில்லொடித்த வீரா போற்றி
ஓம் வீபிஷணன் வாழ்வே போற்றி
ஓம் வெண்ணெயுண்ட வாயா போற்றி
ஓம் வேங்கடத்துறைவா போற்றி
ஓம் வைகுண்டவாசனே போற்றி
ஓம் வையம் காப்பவனே போற்றி
ஓம் நமோ நாராயணனே போற்றி போற்றி.

.
மேலும்