உக்ரைன் போர்- இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார்

By Senthil

உக்ரைன் நாட்டின் கார்கீவ் நகரில் இன்று காலை நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்ற நான்காம் ஆண்டு மருத்துவம் படித்த மாணவர் நகரில் இருந்து தப்பிக்க ரயில் நிலையம் செல்ல முற்பட்டபோது வெடிகுண்டில் சிக்கி சம்பவ இடத்திரேயே உயிரிழந்தார்.

அதே நகரில் இன்னும் 728 தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் சிக்கி உள்ளனர்.

காலையில் வெடிகுண்டு வீசி தகர்க்கப்பட்ட அரசு கட்டிடத்தில் இருந்து 2கிமீ தூரத்தில் 200 தமிழ் மாணவர்கள் உள்ளனர். உக்ரைனில் மாணவர் நவீன் உயிரிழந்ததற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நிமிடமும் விலை மதிப்பற்றது எனவே இந்தியர்களை மீட்பதற்கான தெளிவான திட்டத்தை வெளியிட வேண்டும் என ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தல்

.
மேலும்