ரேஷன் கடைகளில் ரூ.2000 மற்றும் மளிகைப் பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன் விநியோகம்!

By Ezhumalai

தமிழக அரசு கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு உதவும் பொருட்டு, ரூ.4000 பணமும், 14 மளிகைப் பொருட்கள் கொண்ட பையும் கொடுக்க முடிவெடுத்து, சென்ற மாதம் முதல் தவணையாக ரூ.2000 பணம் வழங்கப்பட்டது. 

இதையடுத்து, மீதமுள்ள ரு.2000 பணமும், மளிகைப்பொருட்களின் தொகுப்பும் வரும் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட்ட உள்ளது. இதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளது. இரண்டாம் தவணையான ரூ.2000 வழங்க, தமிழக அரசு 2098 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் அதிகபட்சமாக 100 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. கொரோனா காலத்தில் கூட்டத்தை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டோக்கனில் உள்ள தேதி மற்றும் நேரத்திற்கு மட்டும் மக்கள் கடைக்கு செல்லுமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

.
மேலும்