அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் - முதலமைச்சர்

By Senthil

அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம். கடல் கடந்து சென்றேன், கை நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அதற்கேற்ற முதலீடுகளையும் பெற்றேன்.

துபாய் பயணத்தை பற்றி ஒரு சிலர் பேசி அரசியலுக்காக தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர் - துபாய் பயணம் குறித்து தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். நம்மில் ஒருவர்-நமக்கான முதல்வர் என்ற தலைப்பில் அமீரக தமிழர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. துபாயில் பெரும் மகிழ்ச்சியை தமிழ் சொந்தங்கள் வெளிப்படுத்தினர்.

இலக்கை நிர்ணயித்து உறுதியுடன் பயணித்தால் நினைத்ததை நிச்சயம் அடைய முடியும் என்பதை கற்க முடிந்தது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

.
மேலும்