38 நாட்களுக்கு பிறகு செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலம் திறப்பு

By Senthil

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த பாலாறு பாலம் இன்று திறக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் மழை வெள்ளத்தால் சேதமடைந்தது. இதையடுத்து, பாலம் சீரமைப்பு பணிக்காக, பாலத்தை மூடுவதாக கடந்த 7-ந்தேதி நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, திருச்சியிலிருந்து இருந்து சென்னை வரும் வாகனங்கள், மாற்றுவழியாக சுமார் 15 கி.மீ தூரம் சுற்றி வர உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் பாலாறு பாலத்தில் புதுப்பித்தல் பணி முடிவடைந்ததால் மீண்டும்  இன்று காலை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. 

.
மேலும்