கட்டாயம் பைபிள் எடுத்துவர வேண்டும்: பள்ளி உத்தரவால் சர்ச்சை

By Senthil

பெங்களூரில் உள்ள ஒரு பள்ளி நிர்வாகம், 'கட்டாயம் பைபிள் எடுத்துவர வேண்டும்' என, மாணவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா தலைநகர் பெங்களூரின் ரிச்சர்ட் நகரில் உள்ள கிளாரன்ஸ் பள்ளியில் மாணவ, மாணவியர் அனைவரும் பள்ளிக்கு கட்டாயம், கிறிஸ்தவர்களின் புனித நுாலான பைபிள் எடுத்துவர வேண்டும் என, நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதுபோல், பைபிள் அல்லது துதி பாடல் தொகுப்பை எடுத்துவர எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என, பள்ளி நிர்வாகம் தரப்பில் பெற்றோரிடம் உறுதி மொழி பெறப்பட்டு உள்ளது. இந்த விபரம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

.
மேலும்