ஐ.பி.எல். கிரிக்கெட்: 34 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி!

By SANTHOSH

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று (30/04/2021) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 34 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக, கே.எல்.ராகுல் 91, கிறிஸ் கெயில் 46 ரன்களைக் குவித்தனர். அதேபோல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 35, ராஜட் படிதார் 31 ரன்களை எடுத்தனர்.

இந்த வெற்றியில் மூலம் புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ் அணி

.
மேலும்