மியூகோமைகோசிஸ் தொற்றை எவ்வாறு தவிர்ப்பது?

By News Room

மியூகோமைகோசிஸ் என்ற கருப்புப் பூஞ்சைத் தொற்றை எவ்வாறு தவிர்ப்பது? என்பது குறித்து பார்ப்போம்!

செய்ய வேண்டியவை!

இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும்.

இரத்தக் குளுக்கோஸ் அளவை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தப் பின்னரும் நீரிழிவு நோயாளியாக இருக்கும் பட்சத்திலும் கண்காணிக்க வேண்டும்.

ஸ்டெராய்டுகளை சரியான முறையில் பயன்படுத்தவும், சரியான நேரம், சரியான அளவு மற்றும் சரியான காலம்.

ஆக்சிஜன் சிகிச்சையின் போது ஈரப்பதமூட்டிகளுக்கு சுத்தமான நீரைப் பயன்படுத்துங்கள்.

ஆண்டிபயாடிக்/ பூஞ்சை காளான் மருந்துகளைக் கவனமாகப் பயன்படுத்துங்கள்.

செய்யக்கூடாதவை!

எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்.

மூக்கு அடைப்பு எப்போதும் பாக்டீரியா சைனசிடிஸாக இருக்கும் எனக் கருத வேண்டாம். குறிப்பாக, நோய் எதிர்ப்பு தடுப்பு மற்றும் இம்யூனோமோடூலேட்டர்கள் பயன்படுத்தும் கொரோனா நோயாளிகள் தயக்கப்படாமல் பூஞ்சை நோய்க் குறியீட்டைக் கண்டறிவதற்குப் பொருத்தமான பரிசோதனைகளை மேற்கொள்ளவும் (KOH சோதனை, MALDI- TOF).

மியூகோமைகோசிஸிற்கான சிகிச்சையைத் தொடங்குவதில் தாமதம் வேண்டாம்.

.
மேலும்