மார்ச் 7 வரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல்

By Senthil

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட்ட விவகாரமாக, திமுக பிரமுகரை  தாக்கியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்குப் பின் ஜெயக்குமாரை நேற்றிரவு போலீசார் அவரின் வீட்டில் வைத்து கைது செய்தனர். அதன்பின் அவரை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணன் முன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை மார்ச் 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

.
மேலும்