மறுவாக்குப்பதிவு 5 வார்டுகளில் நாளை நடைபெறும் -தமிழக தேர்தல் ஆணையம் 

By Senthil

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மாநிலம் முழுவதும் 61 சதவீதம் வாக்குகள் பதிவானது.

சென்னையில் மட்டும் வாக்குப்பதிவு 50 சதவீதத்தை கூட தொடவில்லை. நேற்று மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒவ்வொன்றையும்  பெட்டிக்குள் வைத்து மூடி சீல் வைத்தனர்.

பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. மாநிலம் முழுவதும் மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 5 வார்டுகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

.
மேலும்