சசிகலாவால் அ.தி.மு.க-வைக் கைப்பற்ற முடியாது - சி.வி.சண்முகம்

By News Room

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் அ.தி.மு.க நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது,

“ஒன்றரை கோடி தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பக்கம்தான் உள்ளனர். சசிகலா ஒருபோதும் அ.தி.மு.க-வை கைப்பற்ற முடியாது. கருவாடு ஒருபோதும் மீன் ஆகாது.” இவ்வாறு சி.வி.சண்முகம் கூறினார்.

இந்நிலையில் சசிகலா தொண்டர்களிடம் தொலைபேசி வாயிலாக பேசும் ஆடியோ அவ்வபோது வெளியாகிக்கொண்டிருக்கிறது. இதுவரை 12 ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. இதில் சசிகலா அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவது குறித்து தொண்டர்களிடம் நம்பிக்கை வார்த்தைகளை கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

.
மேலும்