இனி ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் பேருந்துகளில் கட்டணம் கிடையாது- அமைச்சர் அறிவிப்பு

By Senthil

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் பேருந்துகளில் இனி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கபட்டு வருகிறது. இந்நிலையில் இனி 5 வயது வரை குழந்தைகளுக்கு அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் வசூலிக்கப்படாது, அவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சில பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் குறிப்பிடத்தக்கது.

.
மேலும்