அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத தோல்வி இது - சசிகலா வேதனை

By Senthil

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் தோட்டத்தில் சசிகலா எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, பேசிய சசிகலா, ''இந்த 74 வது பிறந்த நாளில் நமது அம்மாவின் இலட்சியத்தை வென்றெடுப்போம். நாம் எல்லோரும் இந்த நாளில் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.

நமது அம்மாவின் ஆட்சியில் இருந்தபொழுது தமிழக உரிமைகளை எந்த விதத்திலும் எங்கும் விட்டுக்கொடுத்ததில்லை. எனக்கான தனியான ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சசிகலா., எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கத்தை, அவர் கொடுத்த சட்ட விதிகளின்படி அப்படியே நடத்தி காட்டியவர் நமது அம்மா என்று கூறினார்.

அம்மாவின் நம்பிக்கை வீண்போகாமல் காத்துக் கொள்வது நமது அனைவரின் கடமையாகும். 50 ஆண்டுகள் வரலாற்றில் இந்த இயக்கம் இது போல் தொடர் தோல்வியை கண்டதில்லை. இதை மனதில் எண்ணி பார்த்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்ற இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று கூறினார், ஒன்றிணைந்தால் உண்டு வாழ்வு - இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு இதை எண்ணிப் பார்த்த நாம் செயல்பட வேண்டும் என்றார். இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் சசிகலா தெரிவித்தார்.

.
மேலும்