மலாலா ஆயுத எழுத்து, ஆசிரியர் : ரஞ்சனி நாராயணன்

By News Room

அம்மா, அப்பா, வீடு என்று இருந்தவளை..... குண்டடி பட்டு, "திருக்குர்ஆனில் எங்காவது எழுதியிருக்கிறதா, பெண்கள் படிக்க கூடாது, பள்ளிக்கு போக கூடாது என்று?" இப்படி கேள்வி கேட்டு போராட வைத்தது எது?
மதமா?
பிற்போக்குத்தனமா?
இல்லை வறுமையா?

இப்போதோ குண்டடி பட்டு, போராடி மீண்டவளோடு ஸ்கைப் மூலம் உரையாடல் மேற்கொள்கிறார் ஐ.நா. பொதுச் செயலாளர்..... அவளோடு டீ சாப்பிட வருகிறார் நடிகை ஏஞ்சலினா ஜோலி...... ஒரு பாடலை சமர்ப்பணம் செய்கிறார் பாடகி மடோனா....

அப்படி இவள் செய்தது தான் என்ன? எதற்காக இந்த போராட்டம்? எதற்காக நோபல் பரிசு என்ற கேள்விகளுக்கு பதிலாக இருக்கிறது இந்த நூல்.

வாசிப்பை சுவாசிப்போம்
நூல் : மலாலா ஆயுத எழுத்து
ஆசிரியர் : ரஞ்சனி நாராயணன்
பக்கங்கள் : 104

.
மேலும்