செய்வினை பாதிப்பை எப்படி தெரிந்து கொள்வது ?

By News Room

மாந்திரீகம், தாந்ரீகம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி செய்யும் பூஜைகளை செய்வினை என்கிறார்கள்.

எளிய சில முறைகளின் செய்வினையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  அப்படி அது உறுதியாகி விட்டால்  அந்த செய்வினை பாதிப்பில் இருந்து விடுபட வீட்டிலேயே சில எளிய பூஜைகளை செய்யலாம்.  

செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் போன்றவைகள்  தற்போதும் நடைமுறையில் உள்ளது. எதிரிகளை குறுக்கு வழியில் வீழ்த்த வேண்டும் சிலர் தீய எண்ணம் கொண்டு எதிர்மறை சக்திகளை மற்றவர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள்.

இந்த செய்வினை பாதிப்பு இருந்தால் செய்யும் தொழில், வியாபாரம் ஆகியவற்றில்  திடீர் வீழ்ச்சி ஏற்படும். உடல்நிலை பாதிப்பு ஏற்படும். வீட்டில் உள்ளவர்களுக்கு மாறி மாறி மருத்துவ செலவு, பொருள் இழப்பு ஏற்படும். காரணமே இல்லாமல் பிரச்னைகள் ஏற்படும். எந்த நோய் என்று மருத்துவரால் கூட கண்டுபிடிக்க முடியாத நிலை உண்டாகும். பொருள், உடல் ஆரோக்கியம், உறவுகள் என அனைத்தையும் இழந்து  நம்மை முடக்கி வைத்து விடும்.

இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் நீங்கள் செய்வினையால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என புரிந்துகொள்ளவும்.  

இனி இதனை இந்த செய்வினையை எப்படி அறிந்து கொள்வது...

மண் பானையில் துளசி இலைகளை போட்டு வைத்துவிடுங்கள். வீட்டில் தீய சக்திகள், செய்விவை கோளாறுகள் இருந்தால் துளசி இலைகள் உடனே வாடி விடும். ஒருவேளை துளசி இலைகள் வாடவில்லை எனில்  தீயசக்திகள் ஏதும் இல்லை எனலாம்.

எலுமிச்சை மாலையை உங்கள் கைகளால் கோர்த்து வீட்டிற்கு அருகில் இருக்கும் துர்க்கை அம்மன் அல்லது காளி அம்மன் கோவிலில் செலுத்துங்கள்.  அந்த எலுமிச்சை மாலையில் இருந்து ஒரு பழத்தை எடுத்து வந்து, உங்கள் வீட்டில் ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். ஒரு வாரம் கழித்து அந்த எலுமிச்சை காய்ந்து போய் இருந்தால் வீட்டில் தீய சக்திகள் ஏதுமில்லை என்று அர்த்தம்.  ஒரு வேளை அந்த எலுமிச்சை பழம் அழுகி போய் இருந்தால் தீய சக்தி  நடமாட்டம் வீட்டில் உள்ளதென்று அர்த்தம்.

மேலும், செய்வினை பாதிப்பு இருப்பின், குளக்கரைக்கு சென்று ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து, உங்களின் குலதெய்வத்தை நினைத்து, உங்கள் தலையை சுற்றி, பின்புறமாக எறிந்து விட வேண்டும். பிறகு அந்த குளத்தில் நீராடி, உங்களின் இஷ்ட தெய்வத்தை தரிசித்து வந்தால் செய்வினை கோளாறுகள் நீங்கும்.

வீட்டில் யாராவது செய்வினையால் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தால் தேய்பிறை செவ்வாய் கிழமை பகல் 12 மணி முதல் 01.30 மணிக்குள் காளிதேவியை வீட்டில் பூஜை செய்யலாம்.  காளி தேவியின் படத்தை வீட்டில் வைத்து, கருப்பு துணியில் சிறிது பன்னீர் தெளித்து, அதன் மீது புதிதாக வாங்கிய சிறிய அகல் விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். அந்த விளக்கிற்கு முன் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து பூஜையை செய்ய வேண்டும்.
பூஜை செய்பவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து, கையில் கருகமணி மாலை வைத்து, கருப்பு நிற கம்பளி அல்லது கருப்புத் துணியின் மீது வடக்கு நோக்கி அமர வேண்டும். சிவப்பு நிறப் பூக்கொண்டு முதலில் 18 முறை,

"ஓம் க்ரீம் தந்த்ரபாத நிவாரணாய க்லீம் ஓம் பட்"

என்ற மந்திரத்தை விளக்கின்முன் அர்ச்சித்து மந்திர ஜபம் செய்த பிறகு, தீபத்தின் சுடரை பார்த்த படியே 1008 முறை மந்திரத்தை ஜபித்து உரு ஏற்ற வேண்டும்.

மந்திர ஜபம் முடிந்த பிறகு விளக்கின்  முன்வைக்கப்பட்ட தேங்காயை எடுத்து தீபத்தை மூன்று முறை சுற்றி, காளி தேவியை வணங்கி, " தீயசக்திகள்,செய்வினை கோளாறுகள் எதுவாக இருந்தாலும் நீங்கி விட வேண்டும்" என மனதிற்குள் வேண்டிக்கொள்ள வேண்டும்.

பிறகு அந்த தேங்காயை செய்வினையால் பாதிக்கப்பட்டவரை மூன்று முறை சுற்றி, தெற்கு நோக்கி நின்று அந்த தேங்காயை எரித்து விட வேண்டும். பிறகு நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டு, குங்குமம் வைத்து கொள்ள வேண்டும். இந்த பூஜை செய்யும் போது வெளி நபர்கள் யாரும் இருக்கக் கூடாது.

.
மேலும்