பாகற்காய் ஊறுகாய் எப்படி செய்வது?

By nandha

தேவையான பொருட்கள்:-

1. பாகற்காய் – 2

2. எலுமிச்சம்பழம் – 4

3. உப்பு -ஒரு டீஸ்பூன்

4. மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்

5. பச்சை மிளகாய் -10

செய்முறை:-

பாகற்காயை நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் இரண்டாகக் கீறிக் கொள்ளவும். 

வாணலியில் ஒரு கப் தண்ணீர் வைத்து, அது கொதிக்கும் போது பாகற்காய் துண்டுகளை அதில் போடவும். 

பாதி வெந்து கொண்டிருக்கும் போது, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, பச்சை மிளகாயையும் சேர்க்கவும்.

தண்ணீர் வற்றியதும், இறக்கி ஆற விடவும். எலுமிச்சம்பழங்களைப் பிழிந்து, 

அந்தச் சாற்றை பாகற்காயில் சேர்த்துக் கிளறவும். 

பாகற்காய் அந்தச் சாற்றில் ஊறியதும், சாதத்துக்கு தொட்டுக் கொள்ள அருமையான ஊறுகாய் கிடைக்கும்.

வயிற்றில் பூச்சிகள் இருந்தால், முகம், கை, முதுகு போன்ற இடங்களில் தேமல் வரும். கண்ணிமையில் உள்ள முடி, சரியாக வளராமல் ஒட்டிக் கொள்ளும். 

இந்த ஊறுகாய் சாப்பிட்டால், பூச்சிகள் அழியும். தேமல் மறைவதோடு, இமை முடி நன்கு வளரும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.

.
மேலும்