ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார்

By Senthil

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நடிகர் விஜயை வைத்து, "பீஸ்ட்" படத்தை இயக்கி முடித்துள்ளார். தற்போது அந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. இதனையடுத்து, ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார், 2010ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவான "வேட்டை மன்னன்" திரைப்படத்தின் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இருப்பினும் இந்தப்படம் சில பல காரணங்களால் திரைக்கு வரவில்லை. பின் இவர் நயன்தாரா- யோகிபாபு ஆகியோவை வைத்து கோலமாவு கோகிலா 
என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

அதன் பிறகு, சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கினர் அந்தப் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் விஜயை வைத்து, "பீஸ்ட்" படத்தை இயக்கி முடித்துள்ளார். 
இதனையடுத்து, ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

.
மேலும்