நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி

By Senthil

தென் இந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில், பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், நாசர், விஷால், கார்த்திக் ஆகியோர் தலைமையில்  மற்றொறு அணியும்  போட்டியிட்டனர். இந்தத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன. 'தேர்தல் செல்லாது' என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த ஐகோர்ட், தேர்தல் செல்லும் என்றும், வாக்குகள் எண்ணவும் உத்தரவிட்டது.

அதன்படி, இன்று காலை 8 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி, 
விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இருப்பினும் வாக்கு எண்ணும் பணி சில காரணங்களால் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கியது. இந்நிலையில் பாண்டவர் அணி சார்ப்பாக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷாலும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

.
மேலும்