Breaking News :

Thursday, April 25
.

கண் திருஷ்டியா அல்லது முதலுவி பெட்டகமா....!


நம் முன்னோர்களின் பல அறிவியல் சார்ந்த செயல்கள் மூடநம்பிக்கையாக சித்தரிக்கப்பட்டு, இன்று நாமும் அதை மூடநம்பிக்கை என்றே என்ன தொடக்கி விட்டோம். 

அதில் ஒன்றுதான் பல வீட்டு வாசல்களில் தொங்கிக்கொண்டு இருக்கும் எலுமிச்சை பழமும், மிளகாயும்.

பெரும்பாலான மக்கள் இதை வீட்டு வாசலில் தொங்க விட்டால் கண்திருஷ்டி நீங்கும் என்று நினைத்து தொங்க விடுகிறார்கள். 

அனால் நம் முன்னோர்கள்
எலுமிச்சையையும், மிளகாயையும், தேங்காயையும் வீட்டு வாசலில் தொங்கவிட்டதற்கு, ஒரு மிகபெரிய அறிவியல் ஒளிந்துள்ளது.

 நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் மின்சாரம் எல்லாம் கிடையாது. இரவு நேரங்களில் அவர்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால், ஒரு சிறு விளக்கின் உதவியோடு தான் வெளியே செல்வார்கள். பல நேரங்களில் விளக்கு இல்லமாலும் கூட செல்வார்கள்.

 அப்படி இருளில் செல்லும் போது, அவர்களை ஏதேனும் விசபூச்சியோ , அல்லது விசப்பாம்பு கடித்தால், அவர்களுக்கு முதலுதவி என்பது அவசிய தேவை தானே.

அப்படிப்பட்ட பதற்றமான சூழ்நிலையில், அவர்களது வீட்டு வாசலில் தொங்கிக்கொண்டு இருக்கும்
எலுமிச்சையும், மிளகாயும் தான் அவர்களுக்கு முதலுதவி பெட்டகமாக செயல்பட்டது. 

கையிலோ அல்லது காலிலோ அடிபட்டிருந்தால் முதலில் எலுமிச்சை, மிளகாய் போன்றவை தொங்கி கொண்டு இருக்கும் கையிற்றை அவிழ்த்து மிளகாயை கடிபட்ட இடத்திற்கு சற்று மேலே இருக்கமாக கட்டிவிடுவார்கள்.

இதனால் விஷம் தலைக்கு ஏறாமல் இருக்கும். அதன் பிறகு அது விச பூச்சிகளின் கடியா அல்லது சாதாரண பூச்சிகளின் கடியா எனபதை அறிய மிளகாயை எடுத்து கடித்து பார்த்தால் தெரிந்து விடும். 

மிளகாயின் காரம் தெறியவில்லை என்றால், அது விச பூச்சிகளின் கடி என்றும், காரம் தெறிந்தால் அது சாதாரண விச பூச்சியின் கடி என்றும் அறிவார்கள்.

கடிப்பட்டதால் உண்டாமும் களைப்பை போக்குவதற்காக, எலுமிச்சை சாரை நன்கு பிழிந்து பருக கொடுப்பார்கள். இதனால் அவர்களுக்கு உடனடி
எனர்ஜி கிடைக்கும். கடிபட்ட இடத்தில் எரிச்சல் இருந்தால். அதைகுறைக்க, படிகாரத்தை வைத்து தேய்ப்பார்கள்.

 எலுமிச்சை, தேங்காய் உள்ளிட்ட பொருட்களில் தடவப்பட்டு இருக்கும் மஞ்சளை எடுத்து அதை கடிபட்ட இடத்தில் பூசி விடுவார்கள். இதனால் கடிபட்ட இடத்தில் ஏதேனும் கிருமிகள் இருந்தால், அது அழிந்து விடும்.

எட்டுகால் பூச்சிகள் போன்றவைகள் கடித்து இருந்தால், தேங்காய் தண்ணீரையும், தேங்காய் கீற்றையும், உன்னச்சொல்வார்கள். இதனால் விச முறிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.

இப்படியாக விச கடிகளுக்கு முதலுதவி பெட்டகமாக விளங்கிய பச்சை மிளகாய், எலுமிச்சை, தேங்காய் படிகாரம் போன்றவைகளை தான் நாம்
திருஷ்டி என்று வீட்டில் கட்டி தொங்கவிட்டு கொண்டிருக்கிறோம்.

இனிமேலாவது இதுபோன்றவைகளை முதலுதவி பெட்டகமாக பயன்படுத்துவோம். நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிகையாக பார்க்காமல் அறிவியலாய் பார்ப்போம்.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.