Breaking News :

Thursday, April 25
.

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை என்ன?


1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!*

*2. தேவைக்கு செலவிடு.*

*3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.*

*4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.*

*5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.*

*6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.*

*7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.*

*8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.*

*9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.*

*10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.*

*11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.*

*12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.*

*13. அவ்வப்போது பரிசுகள் அளி.* 

*14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.*

*15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!*

*16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.*

*17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.*

*18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.*

*19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.*

*20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.*

*21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.* 

*22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.*

*23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.*

*24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.*

*25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!*

*26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.* 

*27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.*

*28. நண்பர்களிடம் அளவளாவு.*

*29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.*

*30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!*

*31. வாழ்வை கண்டு களி!*

*32. ரசனையோடு வாழ்!*

*33. வாழ்க்கை வாழ்வதற்கே!*

*34. நான்கு நபர்களை புறக்கணி!*

*மடையன்*
*சுயநலக்காரன்*
*முட்டாள்*
*ஓய்வாக இருப்பவன்*

*35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!*

*பொய்யன்*
*துரோகி*
*பொறாமைக்கைரன்*
*மமதை பிடித்தவன்*

*36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!*

*அனாதை*
*ஏழை*
*முதியவர்*
*நோயாளி*

*37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!*

*மனைவி*
*பிள்ளைகள்*
*குடும்பம்*
*சேவகன்*

*38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!*

*பொறுமை*
*சாந்த குணம்*
*அறிவு*
*அன்பு*

*39. நான்கு நபர்களை வெறுக்காதே!*

*தந்தை*
*தாய்*
*சகோதரன்*
*சகோதரி*

*40. நான்கு விசயங்களை குறை!*

*உணவு*
*தூக்கம்*
*சோம்பல்*
*பேச்சு*

*41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!*

*துக்கம்*
*கவலை*
*இயலாமை*
*கஞ்சத்தனம்*

*42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!*

*மனத்தூய்மை உள்ளவன்*
*வாக்கை நிறைவேற்றுபவன்*
*கண்ணியமானவன்*
*உண்மையாளன்*

*43. நான்கு விசயங்கள் செய்!*

*தியானம், யோகா*
*நூல் வாசிப்பு*
*உடற்பயிற்சி*
*சேவை செய்தல்*

*வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்.....*


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.