Breaking News :

Wednesday, May 08
.

விதவை என்பவள் விபச்சாரி கிடையாது


விதவைக்கும் உணர்வுகள் உண்டு.

விவாகரத்து அல்லது

 

வேறு காரணத்தால் விதவை ஆன ஒருத்தியைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு மாத்திரம்,

 

எவரும் முன் வருவது இல்லை !

 

அவள் கன்னிப் பெண் கிடையாது ,

 

அழகு இல்லை ,

 

அவளுக்கு வயதாகி விட்டது ,

 

அவளுக்கு பிள்ளைகள் உண்டு ,

 

என்று இப்படி எத்தனையோ ?

 

காரணங்களை தாராலமா

 

பட்டியல் போட்டு ஒதுக்கி வாழாவெட்டியாகவே வைத்துக் கொள்ளத் தெரிந்த சமூகத்தில் ;

 

பலருக்கு , அவளை குறுக்கு வழியில் அடைந்து கொள்வதற்கு (விபச்சாரம்) முயல்வதும் ,

 

அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்ப்பதும் , அதில் அவளது வயதோ ,

 

பிள்ளைகளோ ,

 

ஏனைய குறைகளோ ,

 

விளங்காமல் போவதும்தான் கேவலம்!!

 

அவர்களை (அந்த பெண்களை )

 

வாழா வெட்டியாக ஒதுக்கி வைப்பதோ ;

 

அவர்களை விபச்சாரத்தின் பக்கம் அழைக்க நினைப்பதோ எந்த ( ) கிடையாது..!!

 

விதவை என்பவள் விபச்சாரி கிடையாது ,

 

விதவையும் பெண் தான்!

 

அவளுக்கு மார்பு மட்டும் அல்ல ;

 

அதனுள்ளே

 

நொந்து போன மனசும் உண்டு !

 

விதவைக்கும் உணர்வுகள் உண்டு.

 

முடிந்தால் அவளுக்கு கௌரவமான விதத்தில் வாழ்வு கொடுங்கள்!!

 

அல்லது அவள் கௌரவமாக வாழ்வதற்கு உதவி செய்யுங்கள் !

 

இல்லையேல் ,

 

ஓரமாக ஒதுங்கி நடையைக்கட்டி கொண்டே இருங்கள்!

 

காரணம்........

 

அவர்களுக்கும் மனசு உண்டு

 

மானமும் உண்டு!!

 

நடைபிணமாக வாழும்

 

(அப்படிபட்ட பெண்களை ) மதியுங்கள் !

 

வெறும் சதையை பார்க்காதிர்கள் !

 

சிதைந்த போன அவளின் வாழ்வை மீண்டும் சீரழிக்காதீர்கள்...!!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.